நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79 சதவீதம் என்பதன் மூலமே, இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கை காய்ந்து வெளுத்து விட்டது என்று திமுக தலைவர் முகஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில், இரு நாட்கள் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக சென்னையில் உள்ள முச்சந்திகளிலும், சாலை சந்திப்புகளிலும் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை வைத்து விளம்பரம் செய்து- அரசின் பணத்தை வீணடித்ததும்தான் இந்த மாநாட்டின் முக்கிய சாதனை குறிப்பிட்டுள்ளார்.