தமிழகத்தில் நடக்கவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலிலும் நான் போட்டியிடப்போவதில்லை எனவும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என ஏற்கனவே அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என 2017 ஆம் ஆண்டே ரஜினிகாந்த தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.