டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டத்திற்கு பிறகு தயாரிப்பாளர் சங்க துணை தலைவராக கெளதம் மேனனுக்கு பதிலாக நடிகர், இயக்குனர் பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தான் தன் பதவியை ராஜினாமா செய்வதாக பார்த்திபன் கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில “நாமும் ஸ்பெஷல் என்பது மறந்து நம் சுயம் பாதிக்கப்படும் போது சங்கம் சமூகம் என்பதெல்லாம் மூன்றாம் பட்சமே!” என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.