தான் நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பதை தனது கொள்கையாக வைத்திருந்த நடிகை நயந்தாரா, சீரஞ்சீவி நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டமான படமான ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ பட புரொமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் கோலிவுட்டில் நயந்தாராவை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களும், அவருடன் நடித்த சில ஹீரோக்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.