நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் 3 ஒருநாள் போட்டிகளில் வென்று 4 ஆவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. விராட், தோனி போன்ற அனுபவ வீரர்கள் அந்த போட்டிக்கான அணியில் இடம்பெறாததும், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படாததுமே தோல்வியின் காரணங்களாக விமர்சிக்கப்பட்டன. இதையடுத்து நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாட தோனி தகுதி பெற்றால், தினேஷ் கார்த்திக்கு பதிலாக அவரது இடத்தில் தோனி களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.