shikar-dhawan

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மாவின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதிரடியாய் விளையாடிய ரிஷப் பண்ட் 40 ரன்களை சேர்த்தார். அனைத்து வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

12 ஓவர் நிறைவு பெற்ற நிலையில் 97/2

இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 158 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 12 ஓவரில் 97 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்துள்ளது. இதில் ரோகித் சர்மா அரைசதம் கடந்துள்ளார் தொடர்ந்து வெற்றிப் பாதையில் இந்திய அணி சென்று கொண்டிருப்பது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிகர் தவான் தனது 27 வது ஒருநாள் சர்வதேச அரை சதம் அடித்தார்

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி, மவுண்ட் மன்குனாய் மைதானத்தில் நடந்து வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 22 ஓவர் முடிவில் 141 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 65 ரன்கள் கடந்தார். இது இவருடைய 27 வது ஒருநாள் சர்வதேச அரை சதமாகும்.