வருகின்ற மக்களவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைக்கத் தயாராக உள்ளது என சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிக அதிமுகவுடனும், திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சரத்குமார் இந்தமுடிவை எடுத்துள்ளார். இது தொடர்பான ஆலோசனைகளில் இரு கட்சியினரும் ஈடுபடுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.