Rohit Sharma

India vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு

இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு T20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் T20 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நியூசிலாந்து போட்டிகளில் ஓய்வில் இருந்த விராட் மற்றும் பும்ராஹ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் மயாங்க் மார்கண்டேவிற்கு சர்வதேச போட்டியில் முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரை கைபற்றியது நியூசிலாந்து அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைபற்றியது. இன்று நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 212 விளாசியது. அதிகபட்சமாக முன்றோ 72 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அனைத்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர், இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியில் விஜய் சங்கர் 43 ரன்கள் எடுத்திருந்தார், ஆகையால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்ட இந்திய அணி. தொடரிலும் தோல்வி அடைந்தது.

டி20 தொடரை வெல்ல இந்திய அணிக்கு 213 இலக்கு

இந்தியா – நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்தை பேட் செய்யுமாறு பணித்தது. அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டகாரர்கள் இருவருமே குல்தீப்பின் சுழலில் சுறுண்டனர். அதிகபட்சமாக முன்றோ 40 பந்துகளில் 72 ரன்கள் விளாசி அணிக்கு வலிமை சேர்த்தார். இருப்பினும் தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினர். 20 ஓவர் நிறைவில் 212/4 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு இலக்கை நிர்ணயித்தனர். கடினமான இலக்கை அடையும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்தியா – நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி

இந்தியா – நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்கு முன் நடைபெற்ற இரு போட்டிகளில் 1 – 1 என்ற சமநிலை நீடிக்கிறது. இறுதி போட்டியையும் தொடரையும் வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மாவின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதிரடியாய் விளையாடிய ரிஷப் பண்ட் 40 ரன்களை சேர்த்தார். அனைத்து வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

12 ஓவர் நிறைவு பெற்ற நிலையில் 97/2

இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 158 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 12 ஓவரில் 97 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்துள்ளது. இதில் ரோகித் சர்மா அரைசதம் கடந்துள்ளார் தொடர்ந்து வெற்றிப் பாதையில் இந்திய அணி சென்று கொண்டிருப்பது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்ததுதன் மூலம் டி20 தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது நியூசிலாந்து.

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை – இரண்டாவது இடத்தில் இந்திய அணி!

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்த இந்திய அணி, 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 111 புள்ளிகளுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மையம்

இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் கோவாவின் கடற்கரை பகுதியை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடற்கரை பகுதியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ, பாட்டில்களை உடைத்தாலோ 2000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தம் அமல் செய்யப்பட உள்ளது.