சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மோடியை நீங்கள் கட்டித் தழுவியது ஏன் என்ற கேள்விக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமோ வெறுப்போ கிடையாது எனவும் எப்போதும் கோபத்துடன் இருக்கும் மோடிக்கு அழகான அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தவே நாடாளுமன்றத்தில் அவரைக் கட்டியணைத்தேன் என ராகுல் விளக்கம் அளித்தார்.