Politics news in Puducherry

Puducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் குதித்துள்ள நாராயணசாமி அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே தர்ணா போராட்டம் நடத்துகிறார் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வரை சந்தித்து பேச தயாராக உள்ளேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Puducherry Breaking News: பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிடுவதாக புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை கண்டித்துதான் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என புதுவை முதல்வர் கூறியுள்ளார் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிட்டு அரசியல் குழப்பத்திற்கு வழிவகுக்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்

Puducherry Breaking News: கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தர்ணா

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர், இது வரை மாநில அரசு சமர்பித்த 30 திட்டங்களுக்கு அனுமதி வழங்காத்தை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறை படுத்த ஆளுநர் தடையாய் உள்ளார் என கூறி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் துணை ராணுவம் வரவழைக்க பட உள்ளதாக தகவல்.