ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த மருந்தாகும்.