அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் மாநாடு நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓபிஸ், எதிர்கட்சியினரை பார்த்து “உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என உங்களால் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் கூட்டணி விஷயத்தில் அவர் என்ன செய்திருப்பாரோ, அவரது தீவிர விஸ்வாசியாகிய நாங்களும் அதனையே செய்துள்ளோம் என்றார்.