ODI Series

ஒருநாள் தொடரை கைப்பற்றுவது யார்? தென்ஆப்பிரிக்காவா? பாகிஸ்தானா?

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று மாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால், தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்திமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனால் வெற்றி பெற கடினமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.