MDMK Election news in tamil

மதிமுக உயர்நிலை குழு பிப்.25ல் கூடுகிறது

Lok Sabha Elections 2019: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார். அதில் மதிமுக சார்பில் மக்களவை தேர்தலுக்காக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விருதுநகர் தொகுதியில் வைகோ மீண்டும் போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Lok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ம.தி.மு.க. நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட வேண்டும். மேலும் பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தேர்தலில் 125 இடங்களை மட்டுமே பாஜகவால் வெல்லமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்றார்.