Madurai: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் 7 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரின் வரலாற்றை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிப்பாளையத்தில் தேவர் சமுதாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அனைத்து கடைகளும் அடைக்க பட்டிருக்கும் நிலையில்அண்ணாநிலையம், பெரியார் நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபட சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.