Krunal Pandya

80 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்ததுதன் மூலம் டி20 தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது நியூசிலாந்து.

பத்து ஓவர் நிறைவு பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 97/1

97/1 மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்ரோ குருணால் பாண்டிய வீசிய ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்குப்பின் களத்திற்கு வந்த வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் செய்போர்ட் அரைச்சதத்தை கடந்து 58( 35 ) ரன்களுடன் களத்தில் உள்ளார். பத்து ஓவர் நிறைவடைந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி 97 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.

முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இணையும் சகோதரர்கள் !

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக க்ருணல் பாண்ட்யா விளையாடுவார் என்று அறியப்பட்ட நிலையில், இருவரும் இணையும் முதல் சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாண்ட்யா சகோதரர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.