Kanyakumari news today

கன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் மாநாடு

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் வருகின்ற மார்ச் 13ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நிகழ்விற்கு தலைமை ஏற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

தேஜஸ் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

PM Modi Flagged Off Tejas Express: பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்திருந்தார். அதில் குறிப்பாக தேஜஸ் ரயிலை தமிழகத்தில் முதல் முறையாக துவங்கி வைத்தார், இது இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்று. மேலும் இது முதல் கட்டமாக சென்னை முதல் மதுரை வரை இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 6 1/2 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.