Jayalalitha Death News in Tamil: கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் தம்பி துரை, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு திமுக தான் காரணம். அவர்கள் தொடர்ந்த வழக்கினால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் இறந்து விட்டார். எனவே அதற்கு காரணமான திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்றும் கூறினார்.