Indian Premier League 2019

மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள்

IPL 2019: மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் இம்முறை வெளிநாடுகளில் நடத்தப்படும் என்ற செய்தி வலம் வந்தது. அது சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை உண்டாக்கியது. அந்த வகையில் மீண்டும் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது என்ற தகவலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்று பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை அணி விளையாடும் போட்டிக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் நடைபெறுகிறது ஐபிஎல் 2019 போட்டி

IPL 2019: இம்முறை தேர்தல் வருவதால் வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டி நடத்தப்படும் என்றே பேசப்பட்டது, அண்மையில் வெளியான தகவலின் படி இந்தியாவில் முதல் கட்டமாக 17 போட்டிகள் நடைபெறுவதாக தெரிகிறது. அதிலும் முதல் போட்டி சென்னை சேப்பாக்த்தில் நடைபெறுகிறது, இதில் சென்னை பெங்களூரு அணிகள் மோதுகின்றன இது சென்னை வாசிகளுக்கு இன்ப அதிர்ச்சியாய் அமைத்துள்ளது,