இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி வரும் 31ம் தேதி நடக்க உள்ளது.