வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூரில் 3 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், சாலையை பலப்படுத்துதல், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 8 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.