EPS

பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் ஓபிஎஸ் அழைப்பு

AIADMK: வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தரலாம்: அதிமுக அறிவிப்பு

மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக
போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.