Chennai News Today: சென்னையில் சி டி எஸ் நிறுவனத்திடம் கட்டிடம், மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற அதிமுக அரசு 26 கோடி லஞ்சம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுவிட்டன. அதிமுக அரசின் இந்த இமாலய ஊழல் 2012 முதல் 2016 ஆம் ஆண்டிற்குள் நடந்துள்ளது. எனவே தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து இந்த ஊழலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.