மே மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக உள்ளனர். தமிழகத்தை பொருத்த வரையில் பாஜக-அதிமுக கூட்டணி அமையும் என்றே பரவலாக பேசபடுகிறது. அது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்றைய சூழலில் நாற்பது தொகுதியிலும் தனித்து போட்டி என்ற நிலைதான் தொடர்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெற்றி பெறுவதற்கான வியுகங்களை எடுக்கும் என்றார்