நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.