Actor Simbu

தனது படத்தை ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்த நடிகர் சிம்பு

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் இன்று வெளியானது. சென்னையில் காலை 5 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. சென்னை ரோகிணி திரையரங்கில் காலை 5 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் சிம்பு, நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்தனர்.

என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்: நடிகர் சிம்பு

பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கட் அவுட் வைக்கும் போது ஏற்பட்ட பிரச்னையில் எனது ரசிகர் இறந்ததால் வேதனையில், பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அண்டா நிறைய பால் ஊற்றி பேசாத கட் அவுட்டுக்கு ஊற்றாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு கொடுங்கள் என்றே கூறினேன். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறியதை மறப்பவன் இல்லை நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.