2019

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 41வது ஒருநாள் போட்டி சதம் அடித்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்கு!

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313/5 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், கவாஜா சிறப்பான துவக்கம் அளித்தனர். கவாஜா அதிரடியாக விளையாடி 104 ரன்களை குவித்தார். ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து வெளியேறினார். 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி: 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

India vs Australia 2nd ODI: இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது, அதில் முதலில் விளையாடிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 50 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

250 ரன்களை குவித்த இந்திய அணி

India vs Australia 2nd ODI: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவரிலேயே அனைத்து விக்கெடுகளையும் இழந்து 250 ரன்கள் சேர்த்தது, பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய கம்மிங்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி

India vs Australia 2nd ODI: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி தன் 2-வது வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மாவின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதிரடியாய் விளையாடிய ரிஷப் பண்ட் 40 ரன்களை சேர்த்தார். அனைத்து வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

12 ஓவர் நிறைவு பெற்ற நிலையில் 97/2

இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 158 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 12 ஓவரில் 97 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்துள்ளது. இதில் ரோகித் சர்மா அரைசதம் கடந்துள்ளார் தொடர்ந்து வெற்றிப் பாதையில் இந்திய அணி சென்று கொண்டிருப்பது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு 159 ரன்கள் இலக்கு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. 159 ரன்களை இலக்காக கொண்டு தற்போது இந்திய அணி களமிறங்கியுள்ளது. தொடரை கைப்பற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் இந்திய வீரர்கள் முனைப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரண்டாவது டி20 போட்டி-வெற்றிக்கான கட்டாயத்தில் இந்தியா

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆகையால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாய நிலையில் இந்திய அணி உள்ளது.