இந்தியா – நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 வது ஒரு நாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது 200வது ஒரு நாள் போட்டியில் விளையாடினார். மகளிர் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் பங்கேற்கும் முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.