பா.ஜ.க மற்றும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதை அடுத்து நாளை மறுநாள் காலை 8.30 மணி அளவில் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னைக்கு வந்த பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.