மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என அண்மையில் தனது முடிவை அறிவித்திருந்தார் சரத்குமார். மேலும் நேற்று அவர் பேசுகையில் தேமுதிகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைக்க தயாராக உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர் பேசிய சரத்குமார் நாங்கள் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார். தனித்துப் போட்டியிடுவதற்கான காரணம் எங்களது கட்சியின் வாக்கு வங்கியை நாங்கள் தெரிந்து கொள்வதற்காக தனித்து போட்டியிடுகிறோம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.