வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழகத்தில் அந்தயோத்யா அட்டைதாரர்கள் 18 லட்சம் பேர் மட்டுமே அப்படி இருக்கையில் 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளது என்று தமிழக அரசு கூறுவது எப்படி சரியாகும்? தேர்தலை கருத்தில் கொண்டு இந்த எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரித்துள்ளது. எனவே இத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.