டிரைவரிடம் கோபமாக நடந்து கொண்டால் இனி சேவை கிடையாது: உபேர் அதிரடி

Uber Driver

உபேர் கால் டாக்ஸி டிரைவர்களிடம் தொடர்ந்து கோபமாக நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் மொபைலில் இருந்து உபேர் ஆப் பிளாக் செய்யப்படும் என்று உபேர் நிறுவன தலைமை அதிகாரி பிரப்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், உபேர் கால் டாக்ஸி டிரைவர்களை, வாடிக்கையாளர்கள் திட்டுவதாகவும், மேலும் சரியான இடத்தை தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதை தொடர்ந்து கோபமாக நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் ஆப்-பை பிளாக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.