பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் சதி நடக்கிறது – ராமதாஸ்

Perarivalan-PMK-Ramadoss

பேரறிவாளன் நளினி முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 151 நாட்கள் ஆகிவிட்டன. எனினும் இந்த விஷயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு இருப்பது நியாயமில்லை. அதில் ஏதோ சதி இருப்பதாகத் தோன்றுகிறது. ஒருபுறம் அற்புதம்மாள் நீதி கேட்கும் பயணத்தை மேற்கொள்ள மறுபுறம் சிறையில் நளினியும் முருகனும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.