மோடிக்கு எதிராக கருப்பு கொடி – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது

MDMK Chief Vaiko Arrested

பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரின் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிமுக தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து வைகோ உள்பட மதிமுக தொண்டர்கள் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.