நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது

Makkal Neethi Maiam completing one year

Makkal Neethi Maiam One Year Completion: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018 பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் தொடங்கினார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதற்காக கட்சிக் கொடிகள் எல்லாம் ஏற்றப்பட்டது. பின்பு மக்களவை தேர்தலில் தான் போட்டியிடுவதாக இல்லை என்றும் கூறியுள்ளார். மக்கள் நீதி மையம் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதால், இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றினார்.

பின் மாலை 3.30 மணி அளவில் வேதாரண்யம் தொகுதியில் உள்ள மீனவர்களுக்கு வலை வழங்க உள்ள கமல்ஹாசன் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் திருவாரூர் தொகுதியில் உரையாற்ற உள்ளார்.

வரும் 24ம் தேதி நெல்லையில் கட்சியின் ஓராண்டு நிறைவிற்காக பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று அவருடைய கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

வருகின்ற மார்ச் 10 அன்று இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாகவும் அவர்களுடைய கட்சியினர் கூறி உள்ளனர்.