மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை குடும்ப அரசியல் இருக்காது கமல் திட்டவட்டம்

No family politics says kamal haasan

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது என் காலத்திற்கு பிறகு என் குடும்பத்தைச் சார்ந்தவர்களோ, மகளோ என் மைத்துனரோ கட்சியை எடுத்து நடத்த மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மக்கள் அறவே நிறுத்திவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 5000 , 10000 வாங்குவது நீங்கள் நிறுத்திவிட்டு நல்லவர்களுக்கு வாக்களித்தால் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் வரை நீங்கள் சம்பாதிப்பதற்கான வழிகள் வகுக்கப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.