கமல் மக்கள் நீதி மய்யம் மூலம் ஒரு ஆண்டு காலம் சாதித்தது என்ன?

kamal haasan-makkal needhi maiam

Makkal Neethi Maiam: எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்துக்கு பிறகு சினமா துறையில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைப்பது கமல் என்னும் மாபெரும் நடிகனே. சினிமா துறையில் பல நடிகர்கள் தன்னுடைய அரசியல் விசிட்டை இப்பொழுது அப்பொழுது என்று இழுத்தடித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் கமல் அதிரடியாக பிப்ரவரி 21 2018 அன்று மதுரையில் தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்கினார்.

பொதுவாக ஜெயலலிதாவிற்கு அடுத்து எந்த நடிகர் அரசியலுக்கு வர முயற்சித்தாலும் அவர்கள் சந்திக்கும் கேள்விகள் பல “அரசியலுக்கு வந்திங்கனா விஜயகாந்த் மாறி ஆகிடுவீங்க, கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிட முடியாது. நீங்க சினிமாவுல அரசியல் பேசறதோட நிறுத்திக்கோங்க” இதே போல் பல கேள்விகளை தினசரி சந்திப்பது உண்டு. இதையெல்லாம் தாண்டி கமல் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு வருடத்தை கடந்துள்ளார்.

ஆரம்பித்த ஒரு வருடத்தில் 8 லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யத்தில் பதிவு செய்துள்ளனர். அதை தவிர்த்து மகளிர் அணி, மாற்று திறனாளிகளுக்கான அணி என ஒவ்வொரு துறைக்கும் தலைவர்களும், மாநில வாரியான பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.

சரி, தன்னுடைய ஒரு ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எந்த மாதிரியான சாதனையை கமல் செய்துள்ளார் என்பதை சிறிதளவு பார்ப்போம்.

பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கியதும் மாதம் முழுவதும் கட்சி உறுப்பினர் சேர்க்கை, மக்களை சந்திப்பது, மாணவர்களை கல்லூரியில் சந்திப்பது என கட்சியை வலுப்படுத்துவதற்கான முழு வேலையை செய்தார்.

மார்ச் மாதம் தன் கட்சி உறுப்பினர்களுக்கான பணி நியமனம், மகளிர் அணியை வலுப்படுத்துதல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான உழவன் விருதுகள் நிகழ்வில் பங்கேற்றார்.

ஏப்ரல் மாதத்தில் கிராம சபை கூட்டதிற்கான முழு வேலைகளிலும் ஈடுபட்டார். பின் விசில் என்ற செயலியையும்
அறிமுகப்படுத்தி, இதில் மக்கள் தங்களுடைய எல்லாவிதமான பிரச்சனைகளை பற்றியும் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்தார்.

மே மாதம் தமிழ்நாட்டேயே அதிர்ச்சி அடைய செய்த தூத்துக்குடி துப்பாக்கிச் சுட்டில் நடந்தவைகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்வையிட்டார். அதன் பின் கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்பிலும் கலந்துகொண்டு காவேரி பிரச்சனையை பற்றி குமாரசுவாமியிடம் முறையிட்டார்.

ஆகஸ்ட் மாதம் கலியாப்பூண்டி, செங்கட்டூர் பாக்கம், நாமிழஞ்சேரி, தீந்துபாளையம் போன்ற பல மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தை அவர்களுடைய கட்சி தொண்டர்கள் மூலம் நடத்தினார். அதே சமயம் கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள் பற்றிய பட்டியலையும் வெளியிட்டு உடனடியாக செப்டம்பர் மாதத்தில் மாநில உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டரையம் நடத்தினார்.

நவம்பர் மாதம் தஞ்சை மாவட்டத்தினுடைய மாபெரும் கஜா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஜனவரி அன்று ஊர்மக்களுக்கு தன்னலம் இன்றி சேவை செய்பவர்களுக்கான சான்றோர் விருதுகளை தன் கட்சியின் மூலம் சிறந்த 11 நபர்களுக்கு கடலூரில் வழங்கினார். தன்னுடைய புதுச்சேரி அமைப்பையும் தொடங்கினார்.

இப்படி ஒரு ஆண்டுக்கான பணிகளை கமல் தன்னுடைய கட்சி தொண்டர்கள் மூலம் செய்துள்ளார்.

இந்த ஒரு ஆண்டு காலத்தில் அவர் செய்த விஷயங்களில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஒவ்வொரு மக்களுக்குமே தங்களுடைய பகுதி பிரச்சனைகளை தீர்மானித்து அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டியது அவசியம் என்பதை கிராம சபைக்கான விழிப்புணர்வு மூலம் மக்களுக்கு
கொண்டு சென்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்புகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருமே அவர்களுடைய வாழ்க்கை போக்கின் வெற்றி, மற்றும் சமூக அக்கறையை கண்டுதான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக கூறியுள்ளார். ஊழல் கட்சிகளிடம் கூட்டணி ஒருபோதும் இருக்காது எனவும் கூறியுள்ளார்.

வலதும் இல்லாமல் இடதும் இல்லாமல் மய்யமாக பயணித்து கொண்டு இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய மக்களவை தேர்தல் ஆட்டத்தை மக்கள் காண காத்துகொண்டு இருக்கின்றனர்.