சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

Teachers strike Tamil Nadu

சென்னையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை, 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் – சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் போராட்டம் நேற்று 7-வது நாளை எட்டிய நிலையில், இன்று காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏராளமானோர் பணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் 80%, திருச்சியில் 90%, கடலூரில் 60% ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர்கள் மறுபடி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த பின்னரே பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.