தேமுதிக யார் பக்கம் ? பரபரப்பான அரசியல் களம்

DMDK Leader Vijayakanth

Lok Sabha 2019 Elections: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட ஆரம்பித்து விட்டனர், ஆனால் தேமுதிக இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை கூட வெளியிடவில்லை. தேமுதிக அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் என்றே கூறப்பட்டது, பாஜக, பாமக கூட்டணி அறிவிக்கபட்ட அதே நாளில் தேமுதிக கூட்டணியும் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கபட்டது ஆனால் அன்று தேமுதிகவுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட வில்லை, விஜயகாந்த் வீட்டிற்க்கு சென்ற மத்திய அமைச்சர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நட்த்தினார், ஆனால் தேமுதிக சார்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக தெரிகிறது, அதில் பாமாகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்படும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது, ஆனால் அதனை அதிமுக ஏற்று கொள்ள தயாராக இல்லை. மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் ஏற்கனவே 12 தொகுதிகளை பாமகவுக்கும் பாஜகவுக்கும் கொடுக்கப்பட்டு விட்ட்து, மேலும் 7 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்தால், அதிமுகவுக்கு 21 தொகுதிகளாக குறையும், மேலும் தாமாக போன்ற கட்சிகள் வரும் சூழலில் அவர்களுக்கும் ஒரு சில தொகுதிகளில் ஒதுக்கபட வேண்டும்,

இறுதியில் அதிமுகவிற்க்கு குறைவான தொகுதிகளே கிடைக்கும், இதனை கருத்தில் கொண்டே அதிமுக அதிக தொகுதிகளே கொடுக்க மறுக்கிறது. அதிமுக தொண்டர்களும் இதனை விரும்ப மாட்டார்கள்,,

அதிமுக நிச்சயமாக குறைந்த பட்சம் 23 தொகுதிகளில் போட்டியிடும், அப்படியென்றால் இன்னும் 5 தொகுதிகளை மட்டுமே அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுதரும் என தெரிகிறது.

திமுக கூட்டணிக்கு செல்லுமா தேமுதிக ?

பிப்ரவரி 21 காலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுகரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்தார், அப்போது அவரது உடநலம் குறித்து விசாரிக்க வந்தேன், மேலும் தமிழக அரசியல் குறித்தும் பேசினோம் என்றார். நிச்சயம் திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவே விஜயகாந்தை சந்தித்தார் என அரசியல் பார்வையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திமுக பொருத்துவரை 10 தொகுதிகளை காங்கிரஸ் விட்டு கொடுத்துள்ளது, மேலும் அவர்களிடம் 30 தொகுதிகள் உள்ளது, திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் கோரிக்கை ஒரிரு தொகுதிகள் மட்டுமே ஆக தேமுதிக ஒரு வேளை கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு ஐந்து தொகுதிகள் வரை இதுக்கப்பட வாய்ப்புள்ளது.

முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் தேமுதிக

தேமுதிவுக்கு இரு கூட்டணிகளும் அழைப்பு விடுக்கபட்டுள்ளது, எந்த கட்சி அதிக தொகுதிகளை தர தயாரா உள்ளதோ அங்கு தேமுதிக செல்லும் என சிலர் சொல்லப் படுகிறது.

தேமுதிகவின் நோக்கம்

தேமுதிக தமது கட்சியை பலப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது, கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்களவை தேர்தலிலும் படு தோல்வி அடைந்துள்ளது ஆகவே மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்க தேமுதிக முயல்கிறது. அதற்கு ஒரே வழி பலம் பொருந்திய கட்சிகளோடு கூட்டணி வைத்து வெல்லவதே ஒரே வழி…