திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் ரொக்கம், நகைகள் கொள்ளை

Burglars strike at Punjab National Bank

திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் கொள்ளை நடந்துள்ளது. இந்த கொள்ளையில் 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டு பல கோடி மதிப்பிலான பணம், நகை மற்றும் ரொக்கம் கொள்ளை என தகவல் வெளியாகியுள்ளது. வங்கி சுவரை கேஸ் வெல்டிங் மிஷினை கொண்டு துளையிட்டு, லாக்கர்களை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். முகமுடி அணிந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.