Zampa

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே டெல்லியில் இன்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 237 ரன்கள் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரு அணிகள் இடையே நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலி மற்றும் டெல்லியில் நடந்த அடுத்த மூன்று ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவும் வெற்றி 3-2 போட்டி கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 41வது ஒருநாள் போட்டி சதம் அடித்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.