Viswasam

10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்

தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த விஸ்வாசம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் வெலிவந்து 10 வாரம் ஆகியும் இன்னும் ஒரு சில திரையரங்கில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது. தற்போது 10 வது வாரத்தை தொட்டுள்ள விஸ்வாசம் பட சென்னை ரோகினி திரையரங்கில் திரைபடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக மேலும் 2 ஷோவை அதிகரித்துள்ளது.

விசுவாசம் படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்

Viswasam Box Office Update:  சிவா இயக்கத்தில் அஜித் நயன்தாரா, அனுஷ்கா,விவேக், ஜெகபதிபாபு,ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் விசுவாசம். ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படத்தின் வசூல் சாதனை பற்றி கூறிய சத்யஜோதி தியாகராஜன் “இந்தப் படம்தான் எனது வாழ் நாளில் ஆகச்சிறந்தது. இதற்கான பாராட்டு அஜித் மற்றும் ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் தான் செல்ல வேண்டும். இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 125 கோடி முதல் 135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகஸ்தர்களில் வாழ்நாள் பங்கு என்பது ரூபாய் 70 கோடி முதல் ரூபாய் 75 கோடி வரை எட்டும்.எந்த ஒரு அளவுகோலை வைத்து மதிப்பிட்டாலும் இந்த வசூல் வியப்புக்குரியது. படத்தின் கரு குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்களை படம் பார்க்க வைத்தது. 600 திரையரங்குகளில் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.

விசுவாசம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வெளியிடக்கூடாது. அஜித் ரசிகர்கள் கண்டனம்

Viswasam On Amazon Prime:  அஜித் மற்றும் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்து விசுவாசம் படத்தை தயாரித்தனர். இதில் நயன்தாரா மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ளனர். குடும்பக் கதையை மையமாக கொண்டுள்ள இப்படம் மக்களிடையே மற்றும் அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. விசுவாசம் படத்தினுடைய டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. இதனிடையே விசுவாசம் படத்தை அமேசான் பிரைம் வெளியிடலாமா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருந்தனர். இதற்கு பல அஜித் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். விசுவாசம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் அஜித் ரசிகர்கள் இதை அமேசான் பிரைமில் வெளியிடக்கூடாது என்றும் தல அஜித்துடைய பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

Viswasam box office collection: வசூலில் அஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது இடம்

Viswasam Collections : பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களின் படி உலக அளவில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அதிக வசூல் கொடுத்த படங்களில் மெர்சல் மற்றும் சர்க்காரை பின்னுக்கு தள்ளி சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் 170 கோடி வசூல் செய்துள்ளது. முதல் இடத்தை எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி தக்கவைத்துள்ளது.



10 Year Challengeல் வைரலான அஜித் மகள் அனிகா புகைப்படங்கள்

கடந்த 10ம் தேதி வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித்-நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்த நடிகை அனிகா. இவர் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். தற்போது பிரபலமாகிவரும் 10 years challengeல் அனிகாவின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் பல ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தல’ அஜீத் பற்றி இதுவரை யாரும் அறியாத விஷயங்கள்

தல அஜீத்தின் விஸ்வாசம் திரைப்படம், கடந்த 10ம் தேதி வெளியாகி, இன்றைய எட்டாம் நாளில் தமிழ்நாட்டில் 125 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் செய்துள்ளது. இந்நிலையில், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, திரையுலகில் முத்திரைபதித்து, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்களால், “அல்டிமேட் ஸ்டார்” என்றும் “தல” என்றும் அழைக்கப்படும் இவரை பற்றி அறியாத பல விஷயங்களை இங்கே காணலாம்.

நடிகராக மட்டுமின்றி ஒரு கார் பந்தய வீரராகவும் இருந்து வரும் அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.

Thala Ajith Car Racing

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்டு ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார்.

பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

Thala Ajith Bike Mechanic at early stage

1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் இவரது முதல் படம், செல்வா இயக்கத்தில், வெளியான ‘அமராவதி’. 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. .

தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார்.

ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

Thala Ajith Veeram Movie

பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை.

தீனா படத்தில் உள்ளூர் ரவுடியாக நடித்ததை தொடர்ந்து, அவரை ரசிகர்கள் “தல” என்று அழைக்கத் தொடங்கினர்.

பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.

Thala Ajith Yennai Arinthal Movie

பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.

ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி மியாமி குசன், நடிகை சிம்ரனுடன் இணைந்து “நெஸ்லே சன்ரைஸ்” ஆகிய வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார்.

Vedalam Ajith Kumar

நடிகர் அஜீத் நான்வெஜ் உணவுகளை நன்றாக சமைத்து மற்றவர்களுக்கு வழங்குவார் என்ற போதும், அவர் வெஜிடேரியனாகவே இருந்து வருகிறார். மெக்சிக்கன் உணவுகளை சமைப்பதில் நிபுணராக இருந்து வரும் இவர், அந்த உணவு வீடியோக்களை யூடிப்பில் போட்டுள்ளார். பெரும்பாலும், தனது தனிப்பட்ட உணவாக இவர், வேகவைத்த காய்கறிகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுவார்.

Ajith Kumar with MIT Students
கார், பைக் ரேஸ்களில் உள்ள ஆர்வத்தை தாண்டி, அஜீத்துக்கு ஏரோ மாடலிங்கிலும் ஆர்வம் உண்டு. விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ள அஜித், ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களுக்கு ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக அஜித் நியமிக்கப்பட்டார்.

இது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனையை படைத்தது. இந்த பிரிவில் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று அஜித்தின் தக்ஷா அணி முதல் இடத்தையும் தட்டிச் சென்றது என்பது கூடுதல் தகவல்.

தமிழகத்தில் பேட்ட, விஸ்வாசம் ரூ.200 கோடி வசூல் செய்யும்: பிரபல விமர்சகர் கருத்து

பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. வசூலில் தமிழகத்தில் விஸ்வாசமும், மற்ற இடங்களில் பேட்ட படமும் முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, பேட்ட, விஸ்வாசம் 2 படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால், இரண்டு படங்களும் சேர்ந்து தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்றார்.

விஸ்வாசம் அதிகாரப்பூர்வ தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் வெளியீடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ந் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியானது. இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ரஜினியின் பேட்ட தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்த சிறிது நேரத்தில் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.