Varalakshmi Sarathkumar

பொள்ளாச்சி சம்பவத்திற்கு குரல் கொடுங்கள், நடிகர்களுக்கு வரலட்சுமி சரத்குமார் கோரிக்கை

பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது, பெரிய நடிகர்கள் கேள்வி எழுப்பினால் மக்களுக்கு அது எவ்வளவு நல்லதாக அமையும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா நடிகர்களும் நல்ல இடத்தில் உள்ளதால், அவர்களால் மாற்றம் கொண்டு வர முடியும். எங்கேயோ நடக்கிறது என்று அவர்கள் அமைதியாக இருந்தால் ஒருநாள் அவர்களது வீட்டிலேயே நடக்கும், அப்போது அவர்கள் வருந்துவார்கள் என்றார்.

வெளியானது நீயா-2 படத்தின் டிரைலர்

கடந்த 1979-ம் ஆண்டு இயக்குநர் துரை இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான படம் நீயா. இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீபிரியா பாம்பாக வாழ்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது பாம்பை மையப்படுத்தி நீயா-2 என்னும் பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க வரலட்சுமி சரத்குமார், காத்ரீன் தெரெஸா, ராய் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ப்ரோமஷன் வேலையின் ஒரு பகுதியாக படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.