Tiruchirappalli constituency

நான்கு தொகுதிக்கு 400 பேரிடம் நேர்காணல் நடத்தியது தேமுதிக

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை அல்லது நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் 400 பேர் பங்கு கொண்டனர் அதிலிருந்து அக்கட்சி நான்கு பேரை தேர்வு செய்ய உள்ளது. விஜயகாந்த் நிலை கண்டு அக்கட்சியினர் வேதனை அடைந்தனர். விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகள்?

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும் தேமுதிக பொருத்தவரை கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இம்முறை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் சுதீஷ் கட்சி சார்பாக களமிறங்குவார்கள் எனவும் தெரிகிறது.