தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர்த்து கொள்ள அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அதிமுகவை மிரட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். எங்கள் கட்சியை பொறுத்த வரையில் திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அதிகார பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. பாஜக எத்தனை வியூகங்கள் வகுத்தாலும் பாஜக தமிழகத்தில் வளராது என்றார்.