Tamilisai Soundararajan

தூத்துக்குடி தொகுதியை கேட்கும் பாஜக

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியாக இருக்கலாம் என ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில் பாஜகவு தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “தூத்துக்குடி தொகுதியை எங்களுக்குத் தர வேண்டும் என அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், கட்சி மேலிடம் சம்மதித்தால் நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன் என தமிழிசை கூறியுள்ளார்.

எந்த தொகுதியிலும் போட்டியிட தயார், தமிழிசை பேச்சு

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசன், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது. பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை “எந்த தொகுதியாக இருந்தாலும் நான் போட்டியிட தயார்”, அது எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார்.

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

PM Modi visit to Kanyakumari: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்குமுன் மதுரையிலும் திருப்பூரிலும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கு கொண்டார். அதேபோல் மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆறாம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப்பார் எனவும் தெரிகிறது.

எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி தமிழிசை பேச்சு

BJP AIADMK PMK alliance 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என தமிழிசை பேசியுள்ளார். எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம்தான் பெரிது எனவும் , 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாகவும் , அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

மார்ச்சில் ஈரோடு வருகிறார் பிரதமர் மோடி

Modi in Erode: மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மார்ச் 6ஆம் தேதி சென்னையில் நடக்கும் மாபெரும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான அதிமுக பாமக போன்ற கட்சிகள் கட்சித் தலைவர்கள் பங்கேற்ப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

பாஜகவை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

Lok Sabha Elections 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் பாஜக ஒரு போதும் காலூன்ற முடியாது என விமர்சித்தார். மேலும் தேர்தல் வரும் சமயத்தில் தான் பாஜக தலைவர்கள் தமிழகம் வருவதாக குற்றம்சாட்டினார்.

முதல்வர் பழனிச்சாமி, தமிழிசை சந்திப்பு

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர், அதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வேளையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திதுள்ளார், இந்த சந்திப்பில் பாஜகவிற்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விவாதிக்கபட்டலாம் என தகவல்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை

DMK Lok Sabha Election Manifesto: திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசனை செய்ய உள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் அறிக்கை இன்றே இறுதி செய்யப்பட்டு, மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் தேதி தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது அதிமுக

Lok Sabha Elections 2019: தமிழக மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அதிகாரபூர்வமாக இணைத்துவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமுதிக உடன் அதிமுக தலைமை அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24 ஆம் தேதி, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிடப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அமித் ஷா இன்று தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் அந்த வகையில். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித் ஷா. அரசியல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்க உள்ளார்.

உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Election 2019 Tamil Nadu:  மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்த விவரம்

பாமக – 7
பாஜக 5

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.

இணைந்தது பாமக

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

கைகோர்த்த பாஜக

ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?

இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

திமுக கூட்டணிக்கு சவாலா ?

இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.

யாருக்கு எந்த தொகுதிகள் ?

அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?

மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.

Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

Lok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா

Lok Sabha Election Alliance in Tamil Nadu: தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில கட்சிகளோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை  துவங்கியுள்ளது பாஜக. தமிழக அரசியலை பெருத்தவரையில் பாஜக ஒற்றரை இலக்கு வாக்கு வங்கியையே பெற்றுள்ளது, தமிழகத்தில் நடந்த கடைசி தேர்தலான ஆர்.கே நகர் தேர்தலில் நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளை பெற்றது பாஜக, தமிழகத்தில் தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவோடு கூட்டணி தொடர்பாக சில தினங்களாகாவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக-பாஜகவோடு மேலும் சில கட்சிகளும் சேரும் என்றே பேசப்பட்டது. அண்மையில் பாமக இளைகஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார், மேலும் தேமுதிக சார்பில் சில கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று அறிவிக்கப்பட்டது, அதிமுக தரப்பில் பேசிய வைத்தியலிங்கம் கூறியதாவது ‘’ பாமக, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம்” என்றார். இந்த தருணத்தில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அமித்ஷா தமிழகம் வந்த அதே நாளில் தான் மத்திய அமைச்சர் பி்யுஷ் கோயலும் சென்னை விரைந்தார். தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர், இது அவர்கள் கூட்டணியை தொடர்பான செய்தி உறுதியானது, ஆகவே அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதில் அதிமுகவையும் இதர மாநில கட்சிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக இறக்கியுள்ளதாக தெரிகிறது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தால் தொகுதி பங்கீடு பற்றிய கேள்வி ஏழும், அதற்கு பதில் தரும் விதமாக சமூக வலைதளத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகவலின் அடிப்படையில்

அதிமுக  24 தொகுதிகளும்

பாஜக     8    தொகுதிகளும்

பாமக   4     தொகுதிகளும்

தேமுதிக  4  தொகுதிகளும்

போட்டியிடலாம் என்றே கூறப்படுகிறது, இருப்பினும் இவைகளில் எந்த கட்சியும் கூட்டணி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப் படும் என்றே றப்படுகிறது. மேலும் தமிழக மக்களிடையே இந்த கூட்டணி வரவேற்பை பெருமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகளே சரியான பதிலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Tamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இம்முறை தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் பிரம்மாண்டமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழக மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சியை கொடுப்போம் என உறுதியளித்தார். திமுக, காங்கிரஸ் தவிர இதர கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும், எந்தெந்த கட்சி என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்,

Lok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி – கனிமொழி

டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய திமுக எம் பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கஜா புயலால் தமிழகமே தள்ளாடிய பொழுது வராத மோடி மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இப்பொழுது திரும்ப திரும்ப வருகிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று கூறிய அவர்; திமுக சார்பில் தான் தேர்தலில் நிற்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுகவை அதிரடியாக தாக்கிய அமித் ஷா

நேற்று ஈரோட்டில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதல்முறையாக திமுகவை குறிவைத்து கடுமையாக சாடியுள்ளார். “எங்களுக்கு எதிராக கொள்ளை கூட்டணி அமைந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கான கூட்டணி இல்லை; ஊழலுக்கான கூட்டணி” என்று கூறினார். மேலும் மக்களின் விருப்பத்தை கேட்டே பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என்றும் கூறினார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்.பேச்சு, நாடகம், வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி என பல பிரிவுகளில் வெற்றி வெற்றி பள்ளியில் தனித்துவமான மாணவியாக இருந்தார். மேலும் கோகோ மற்றும் கைப்பந்து அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி அமித்ஷா விமர்சனம்

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்க இருக்கும் தருணத்தில், தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை துவங்கியுள்ளது பாஜக, பிரதமர் மோடி உட்பட தேசிய பாஜக தலைவர்கள் அனைவரும் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள், அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார், தற்போது அமைந்துள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை என விமர்சித்த அவர் அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

பா.ஜ.க மற்றும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதை அடுத்து நாளை மறுநாள் காலை 8.30 மணி அளவில் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னைக்கு வந்த பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amit Shah In Tamil Nadu: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா ஈரோட்டிற்கு வருகிறார். ஈரோட்டில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் நெசவாளர்களையும் சந்திக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

நீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங்

இன்று மக்களவையில் சமாஜ்வாதியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் உரை நிகழ்த்தினார், அப்போது மக்களவையில் உள்ள அனைவருமே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார், அதன்பின்னர் பிரதமர் மோடியை பார்த்து மீண்டும் நீங்களே பிரதமதராக வேண்டும், என வாழ்த்து தெரிவித்தார். இது அருகில் அமர்ந்திருந்த சோனியா காந்திக்கு பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வரும் தருணத்தில் முலாயம் சிங் இவ்வாறு பேசியிருப்பது தேசிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டெபாசிட் இழந்த தி.மு.க என்று நாங்கள் அழைக்கலாமா? – தமிழிசை சௌந்தர்ராஜன்

பா.ஜ.க. நோட்டா உடன் தான் போட்டி போடும் என்று கி வீரமணி கூறியதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், “தேர்தலையே சந்திக்காத வீரமணி அவ்வாறு சொல்வதற்கு தகுதி அற்றவர். ஆர் கே நகர் தொகுதியில் தி.மு.க டெபாசிட் இழந்தது. அப்படி என்றால் தி.மு.க டெபாசிட் இழந்த கட்சி என்று நாங்கள் அழைக்கலாமா?” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு

பிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு அரசு விழாவிலும் மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் வெளியான அறிக்கையின்படி பிரதமரின் வருகை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடி – தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

சென்னை பாஜக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். கடந்த இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்தபோது கோ பேக் மோடி என்ற hashtag ட்ரெண்டிங் ஆனது. ஆனால் இந்த முறை தமிழக மக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். இடைக்கால பட்ஜெட்டை காமெடி என்று கூறும் மு க ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியாக உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது இறுதி முடிவு எடுத்தவுடன் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.