தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது அதோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் வருகின்ற சமயத்தில் தொடர்ந்து 5 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் வாக்கு பதிவு குறைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் கட்சிகள் சார்பில் கூறப்படுகிறது. ஐந்து நாள் விடுமுறை வருவதால் அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.