Tamil Nadu Government

“எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன?”- நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததே இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் இனிமேல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என்பது குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மது கடை – மதுரை நீதிமன்றம் அறிவுரை

வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தின் பண வரவில் பெரும் பகுதி மதுக்கடைகளிலிருந்தே வருகிறது. மக்களின் நலனைக் குலைக்கும் மதுவை நம்பி இல்லாமல் வேறு வழிகளில் வரவை அதிகரிக்க முயற்சிக்குமாறு அரசை நீதிமன்றம் சாடியுள்ளது.

8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

தமிழக அரசின் பட்ஜெட் வரும் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நிதி அமைச்சர் பதவி வகித்து வருகிறார் ஓபிஎஸ், கடந்த ஆண்டு மட்டும் கட்சி பிளவு காரணமாக மின்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார், ஆகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.

மெரினாவில் குளிப்பதற்கு வயது வரம்பு 18

மெரினா கடற்கரையில் குளிப்பதற்கு வயது வரம்பு 18 என நிர்ணையிக்க பட்டுள்ளதாக சென்னை கிழக்கு மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் மெரினாவை நோக்கி மக்கள் தஞ்சம் அடைகிறார்கள், அப்போது அசம்பாவிதகங்களை தவிர்க்கும் வகையில் இதனை நடைமுறை படுத்தவுள்ளனர். அதனையும் மீறி 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளித்தால் அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளனர்.

ஜாக்டோ- ஜியோ போராட்டம்- கடந்து வந்த பாதையும் தற்போதைய நிலையும்

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதியில் இருந்து ஜாக்டோ – ஜியோ (அரசு ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள்) அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு இவர்கள் போராடுவது முதல் முறை அல்ல எனினும் இம்முறை இந்த போராட்டத்தின் வீரியம் சற்று அதிகமாக இருப்பதய் உணர முடிகிறது. இதன் தாக்கம் பொது மக்களின் மனதில் பல விதமான கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒன்பது அம்ச கோரிக்கைகள்:

  1. 2003 க்கு மேல் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து , பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். அதன் மூலம் முழு பென்ஷன் தொகையும் அரசின் கஜானாவில் இருந்து அரசால் செலுத்தப்படும்.
  2. தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
  3. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ; தமிழக அரசு பணியிடங்களை குறைத்து , அரசு துறைகளை அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அரசு ஆணை எண் 56 ஐ ரத்து செய்ய வேண்டும்.
  4. 3500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.
  5. அங்கன்வாடி மையங்களில் எல் கே ஜி மற்றும் யு கே ஜி வகுப்புகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.
  6. ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  7. சிறப்பு கால முறை சம்பளம் பெற்று வரும் அங்கன்வாடி , சத்துணவு , வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
  8. 21 மாத சம்பள மாற்ற நிலுவை தொகை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  9. தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை படுத்தி சம்பளம் வழங்க வேண்டும்.

Anna Award

தமிழக அரசின் பதில்:

மேற்க்கூறிய கோரிக்கைகளை தமிழக அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி தற்போதைய தினம் வரை ஏற்று கொள்ளவில்லை. பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கும் நீதி மன்ற உத்தரவுகளுக்கும் பிறகு தற்காலிகமாக இப்போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேலையில் இப்போராட்டம் நடந்து கொண்டிருப்பது மாணவர்கள் மத்தியில் சஞ்சலத்தையும் பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதை மனதில் கொண்டு விரைவில் இரு அமைப்புகளும் அரசும் சேர்ந்து ஒரு நிரந்தர முடிவை எட்ட வேண்டும் என்பது சாமானியர்களின் குரலாக உள்ளது.

ஜாக்டோ- ஜியோ போராட்டம்- கடந்து வந்த பாதையும் தற்போதைய நிலையும்: Jacto-Geo Protest – The path that passed and the current status.

தமிழகத்தில் விரைவில் அம்மா அம்புலன்ஸ்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும் திட்டத்துக்கு “ அம்மா திட்டம்” என்றே பெயர் வைப்பது வழக்கம். குறிப்பாக அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என பெயரிட பட்டுள்ளது, அதன் வரிசையில் விரைவில் வருகிறது அம்மா அம்புலன்ஸ். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ”அம்மா ஆட்சி காலத்தில் மருத்துவத்துறை அதிநவீன வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்வரிசையில் அவசர காலத்தில் உதவும் வகையில் அம்மா அம்புலன்ஸ் திட்டம் நடைமுறைபடுத்தப்படும்.