Tamil Nadu Congress Committee

தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது, மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் இல்லை

கடந்த தேர்தலில் போதிய வாக்கு சதவீதத்தை பெறாததால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி இழந்துள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின் படி குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்தால் மட்டுமே தங்கள் சின்னத்தை தக்கவைத்து கொள்ள முடியும், அதே நேரம் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சிக்கு சின்னம் தேர்ந்தேடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி தமிழ்நாடு இளைஞர் கட்சி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால் அந்த கட்சியின் கோரிக்கையை ஏற்று மோதிரம் சின்னத்தை வழங்கியுள்ளது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னதில் போட்டியிடும் என பேசப்பட்டு வந்த நிலையில் அவர்களது மோதிரம் சின்னமும் முடக்கப்பட்டதால் நிச்சயம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகிறது.

திருச்சி தொகுதியை பெற திருநாவுக்கரசர் முயற்சி

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதியும் புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி போன்ற தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் திருச்சி தொகுதியையும் எங்களுக்கே தர வேண்டும் என்ற கோரிக்கையும் திமுகவிடம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அதில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதே தொகுதியை மதிமுகவும் கேட்டு வருவதால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது, மிக விரைவில் அனைத்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு யாருக்கு எந்த தொகுதி என்பது அறிவிக்கப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயசூரியன் சின்னத்தில் விசிகே போட்டியா?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே சின்னம் இருப்பதால் மற்ற கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் “கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்” என்றார்.

40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் வைகோ உறுதி

மக்களவைத் தேர்தலில் இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என வைகோ கணித்துள்ளார். மேலும் 40 தொகுதிகளிலும் நானும் என் கழகத் தோழர்களும் பிரச்சாரம் செய்வோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் தொகுதியை கேட்கும் காங்கிரஸ்

DMK-Congress Alliances: திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக சார்பில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இந்த தருணத்தில் யாருக்கு எந்த தொகுதி என்ற ஆலோசனையும் துவங்கியுள்ளது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியை பல மாதங்களுக்கு முன்னதாகவே திருமாவளவன் கேட்டு வருகிறார். மேலும் 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களிலும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. திமுக தலைமை யாருக்கு அந்த தொகுதியை ஒதுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அரசியலுக்கு ரீஎண்டரி கொடுத்த நாஞ்சில் சம்பத்

DMK: அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் தற்போது அவர் மிண்டும் அரசியலுக்கு வந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலையில் இருந்தவர் தினகரன் அவர்கள் ஆரம்பித்த அமமுக இயக்கத்தில் திராவிடம் என்ற சொல் இல்லாத காரணத்தால் அவர் அந்த இயக்கத்தில் இருந்து விலகினார். தற்போது திமுகவோடு இணைந்துள்ளதாக தகவல் வெளியாயின. அதனை உறுதி செய்யும் வகையில் திமுக நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேசியது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி

DMK-MDMK Alliances: திமுக கூட்டணியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சற்று முன்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இந்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். மறுமலர்ச்சி திராவிட கழகம் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

20 இடங்களில் போட்டியிடும் திமுக

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கி வருகிறது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு போக தனக்கென திமுக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த காலங்களில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளை விட்டுகொடுக்கும். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கபட்டன. ஆனால் 8 இல் மட்டுமே காங்கிரஸ் வேற்றி பெற்றது. இதே நிலைமை தற்போதும் நடந்துவிடுமோ என சிலர் அஞ்சுகின்றனர்.

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி -ஒதுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் வருகின்ற 21வது சட்டமன்ற தேர்தலிலும் புதிய நீதி கட்சி அதிமுக ஆதரவு நிலைபாடு எடுக்கும் என தெரிகிறது. ஒதுக்கப்பட்டுள்ள 1 தொகுதியில் அக்கட்சியின் தலைவர் சண்முகம் போட்டியிடுவார் என தெரிகிறது.

புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி என துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்துள்ளார். அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியே போட்டியிடுவார் என தெரிகிறது. இதுவரை 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுத்துள்ளது. மீதமுள்ள 25 தொகுதிகளில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா போட்டி?

Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மேலும் 2009 மக்களவைத் தேர்தலிலும் ஆ ராசா நீலகிரியில் தான் போட்டியிட்டார். 2009இல் மகத்தான வெற்றியை பதிவு செய்திருந்தார். அதேபோல் 2014லிலும் நீலகிரி தொகுதியில் தான் போட்டியிட்டடார். ஆனால் அப்போது வெற்றி கிட்டவில்லை. இம்முறையும் ஆ ராசா நீலகிரி தொகுதியில் தான் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பாமகவால் அதிமுகவுக்கு பலவீனம் ஏற்படும் திருமாவளவன் கருத்து

Elections 2019 Tamil Nadu: அதிமுகவும் பாஜவும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என அனைவருமே கூறிவந்தனர், ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைந்தது சில பாமக நிர்வாகிகளுக்கே அதிர்ச்சியாய் அமைந்தது, அதனால் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர் தனது பதவியை ராஜினாமா செய்தனர். பாமக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளதை குறித்து கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன் “ பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பலவீனம் ஏற்படும்” என்று பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்துள்ளார்.

தொகுதிகளை வாரிவழங்கும் திமுக…

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது, திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்த வரை ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளது, அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன, அதோடு சில அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அள்ளி கொடுத்த திமுக

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் முக்கியதுவம் வாய்ந்த கட்சியாக கருதப்படுவது காங்கிரஸ் கட்சிதான், இது தேசிய கட்சி, மத்தியில் பல முறை ஆட்சியில் இருந்த கட்சி, இம்முறை அவர்கள் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்தே தொடர்கிறது, மேலும் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை தொகுதி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக, எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

விசிகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், எனவும் எங்கள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கபட வேண்டும், அதிலும் நானே போட்டியிடுவேன் எனவும் வெளிப்படையாக தெரிவித்தார், இந்த கோரிக்கையை திமுக ஏற்கும் என எதிர்பார்த்த நிலையில், அதோடு சேர்த்து மேலும் ஒரு தொகுதியையும் திமுக வழங்கியுள்ளது, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை விசிக கேட்கும் என தெரிகிறது, விசிக தொண்டர்கள் நம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இரு தொகுதிக்கு திமுக சம்மதம் தெரிவித்திருப்பது தொண்டர்களை இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?

திமுகவின் தோழமை கட்சிகளாக விளங்கிய மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுக தலைமை 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது, சிபிஎம் கட்சிக்கு திமுக தலைமை 2 தொகுதிகளை தர முன்வந்துள்ளது, ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும்?

கூட்டணி அமைத்தால் தேர்தலை சந்திப்பதை விட தொகுதி பங்கீடுவது தான் சவாலாக இருக்கும், அதே நிலைதான் தற்போது திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது, மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், போன்ற கட்சிகளுக்கு 8 தொகுதிகளையும், மேலும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டும், அந்த வகையில் ஏற்கனவே 19 தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளது திமுக, மேலும் ஐஜேகே போன்ற கட்சிகளும் உள்ளனர், அவர்களுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்தால் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

கருணாநிதி அவர்கள் இருந்த போதே கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துவிட்டு 16 தொகுதிகளில் மட்டுமெ திமுக நின்றது, இருப்பினும் தற்போதைய சூழலில் தொகுதி பங்கீட்டை ஸ்டாலின் சரியாக கையாண்டுள்ளாரா என்பதே மீதமுள்ள கதை.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டி

Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவை தொகுதியில் திமுக மகளிரணி செயலரும், ராஜ்ய சபா எம்,பியுமான கனிமொழி நிச்சயம் போட்டியிடுவார் என்ற தகவல் சமீப காலங்களில் பேசப்பட்டு வந்தது, அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக திமுக பிரதிநிதிகள் கூறிவந்தனர். இந்நிலையில் இன்று மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை கட்சி தலைமைக்கு கனிமொழி அளித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் மட்டுமே உடன் இருந்தனர், அதன் மூலம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

மதிமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு

DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீட்டு திமுக வழங்கி வருகிறது, அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் மதிமுகவிற்கும் இரண்டு தொகுதிகள் தான் வழங்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிகிறது. திமுகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மறுமலர்ச்சி திராவிட கழக பொது செயலர் வைகோ தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது, மக்களவை தேர்தலில் அந்த கட்சிக்கு எத்தனை தொகுதியில் என்பது குறித்த அலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் சிபிஐ கட்சியின் மாநில பொருப்பாளர் திரு. முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டது, சிபிஐ கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு

Lok Sabha Elections 2019 Tamil Nadu: திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இரு கட்சி தலைவர்கள் நடுவே நடைபெற்றது. சிதம்பரம் தவிர விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் தொகுதி பெயர்கள் இப்போது வெளியிடப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

PM Modi visit to Kanyakumari: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்குமுன் மதுரையிலும் திருப்பூரிலும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கு கொண்டார். அதேபோல் மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆறாம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப்பார் எனவும் தெரிகிறது.

தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை

Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது. அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மார்ச்சில் ஈரோடு வருகிறார் பிரதமர் மோடி

Modi in Erode: மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மார்ச் 6ஆம் தேதி சென்னையில் நடக்கும் மாபெரும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான அதிமுக பாமக போன்ற கட்சிகள் கட்சித் தலைவர்கள் பங்கேற்ப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ரஜினி கமல் கூட்டணி வைக்க வேண்டும் விஷால் கருத்து

தமிழக நலன் கருதி கமலும் ரஜினிகாந்த் அவர்களும் ஒன்று சேர்ந்து அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ரஜினிகாந்தோடு கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு கமல் ஹாசன் “ரஜினி கட்சி ஆரம்பித்த பின்பு பார்ப்போம்” என கூறியுள்ளார்.

அதிமுக ரயில் டெல்லி செல்கிறது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

AIADMK: அதிமுக என்னும் ரயில் டெல்லி செல்வதாகவும், விருப்பம் உள்ள கட்சிகள் எங்களோடு சேர்ந்து பயணிக்கலாம் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எங்களோடு இணைந்தால் பத்திரமாக டெல்லி செங்கோட்டை செல்லலாம் எனவும் ஏராவிட்டால் இன்ஜின் இல்லாத ரயிலில் தான் ஏற வேண்டும் என திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுவரை எந்த கட்சியுடன் கூட்டு சேரா கட்சிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுத்து உள்ளதாக தெரிகிறது.

பாமகவின் மாநிலத் துணைத் தலைவர் விலகல்

PMK: பாமகவின் மாநிலத் துணைத் தலைவராக நடிகர் ரஞ்சித் பதவி வகித்து வந்தார். ஆனால் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவோடு கூட்டணி வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஊழல் கட்சி என சொல்லிவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்து உள்ளது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

புயல்வேக பிரச்சாரத்திற்கு வைகோ தயார் ஸ்டாலின் பேச்சு

Lok Sabha Elections 2019: 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய புயல்வேக பயணத்திற்கு வைகோ தயாராகிவிட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கப்படும். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்” 40 தொகுதிகளிலும் வைகோ பிரச்சாரம் செய்வார்” என்றார்.

கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி

Elections 2019 சென்னையில் நடந்த புதிய தமிழகம் கட்சி பொதுகூட்டத்தில், பட்டியலின பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை எந்த கட்சி ஏற்கிறதோ அவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சின்ன பையனை வைத்து பேச வேண்டாம்- ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

AIADMK: மக்களவை தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் இணையும் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. சில கட்சிகளை விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகர் கட்சி மேடைகளில் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜேந்திரபாலாஜி சின்ன பையனை வைத்து தேமுதிக பேசவேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

DMK Alliances: மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகுதியில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.

அதிமுகவின் தயவு இல்லாமல் யாரும் பிரதமராக முடியாது ராஜேந்திரபாலாஜி

AIADMK: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உரையாற்றினார். அப்போது அதிமுகவின் தயவு இல்லாமல் யாரும் பிரதமராக முடியாது என தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய கட்சியாக இருந்தாலும் பாஜக அதிமுகவை சார்ந்துதான் இருக்கிறது என்ற தொனியில் பேசி இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன், பாரிவேந்தர் கூட்டணி அமைக்க வாய்ப்பு

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஒருமித்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமையலாம் என தெரிவித்தார். இந்த நிலையில் எஸ் ஆர் எம் குழும நிறுவனத் தலைவரும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு பாரிவேந்தர் அவர்கள் கமல்ஹாசனோடு இணைந்து தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கமலை மனதார வாழ்த்திய ரஜினிகாந்த்

முதல் முறையாக தேர்தலில் போட்டியிடப் போகும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய ரஜினிகாந்த் “கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து தேர்தலில் முதல் முறையாக போட்டியிட போகும் மக்கள் நீதி மய்யதின் தலைவர் என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.

நாங்கள் தான் தமிழகத்தின் A டீம் – கமல்ஹாசன்

Makkal Needhi Maiam: நெல்லை பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய கமல்ஹாசன் என்னைப் பார்த்து பாஜகவின் B டீம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நாங்கள் தான் தமிழகத்தின் A டீம். இதில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை வெளியிட்ட கமல்ஹாசன் தனது கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு வெளியிட்டார். ஊழலை ஒழிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேட்பாளராக வரவேண்டும். நல்லவர்கள் நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் அனைவரும் எங்கள் கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கலாம்” என்றார்.

தமிழகத்தை ஆள்வது அல்ல முன்னேற்றுவது எங்கள் நோக்கம், அன்புமணி பேச்சு

Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டே இந்த கூட்டணி அமைந்துள்ளதாகவும், தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கே ஆதரவு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றமே எங்கள் நோக்கம் என்றார் அன்புமணி ராமதாஸ்

ஸ்டாலின் விஜய்காந்திடம் அரசியல் பேசினார் பிரேமலதா தகவல்

Lok Sabha Elections 2019: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் அண்மையில் சென்னை திரும்பினார். அவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நடிகர் ரஜினிகாந்த், திருநாவுகரசர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களிடம் அரசியல் குறித்தோ கூட்டணி குறித்தோ ஏதுவும் பேசவில்லை என கூறினார் ஸ்டாலின். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேமலதா இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது நிச்சாயம் அரசியல் பேசுவார்கள் அது இயல்பு என்றார். அதே போல் தான் ஸ்டாலின், விஜயகாந்த் சந்திப்பும் இருந்தது என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

இது மக்கள் விரோத கூட்டணி கே.எஸ். அழகிரி தாக்கு

Lok Sabha Elections 2019: தற்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி விமர்சித்துள்ளார். திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியே மக்கள் நலன் சார்ந்த கூட்டணி எனவும் காங்கிரஸ் ஆட்சியில்தான் மக்கள் நன்மையடைவார்கள் எனவும் கூறியுள்ளார்.

என்னை மாற்றுவதற்கான முழு உரிமையும் ராகுல் காந்திக்கு உண்டு – திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் பதவி விலகி புதிய தலைவராக கே எஸ் அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து நன்றியை தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியில் சோனியா ராகுல்காந்தி தலைமையில் சேர்ந்தேன். அதன்பிறகு அகில இந்திய செயலாளராக கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைத் தந்தார். பின்னர் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக பணியாற்றக்கூடிய வாய்ப்பைக் கொடுத்தார். சுமார் இரண்டரை ஆண்டு காலம் பணியாற்றி 30,000 பேரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துள்ளோம். 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் உறுப்பினர்களை ஏற்படுத்தியுள்ளோம். பாஜக மற்றும் அதிமுக கட்சிகளின் ஊழலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். மக்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு தொடர்ந்து பாடுபட்டோம். என்னை தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக அறிவித்தது ராகுல் காந்திதான். என்னை மாற்றுவதற்கான முழு உரிமையும் அவருக்கு உள்ளது. என்னை மாற்றுவதற்கு முன்பே என்னிடம் தகவல் கூறப்பட்டது என்று கூறினார்.

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுகரசர் விடுவிக்கபட்டு புதிய தலைவராக கே.எஸ் அழகிரி என்பவர் நியக்கபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதியேற்ற பின்னர் கட்சியில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், அவரின் உழைப்பால் மூன்று மாநில தேர்தலில் வெற்றி கண்டது காங்கிரஸ். அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தலைவரை மாற்றியுள்ளதாக தெரிகிறது.