Tamil Live News Tamil Nadu News Today

தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக

DMK Lok Sabha Election Manifesto: வருகின்ற மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என விரும்பும் மக்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தங்களது யோசனைகளையும், கனவு திட்டங்களையும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் – விஜயகாந்த் இன்று சந்திப்பு

DMDK Vijayakanth: சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியா திரும்பி சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், அவரின் உடல்நலன் குறித்து விசாரிக்க தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று அவருடைய இல்லத்திற்கு செல்கிறார். தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக கடுமையாக முயற்சி செய்து வரும் நிலையில், திமுகவும் தனது பங்கிற்கு முயற்சிகளை முன்வைக்கிறதோ என்ற சந்தேகத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்துகிறது.

திருமாவளவனுக்கு ஒரே தொகுதி

Lok Sabha Elections 2019: திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படும் எனவும் தெரிகிறது. மேலும் அவர் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆவலாக இருப்பதாக தகவல்.

மதிமுக உயர்நிலை குழு பிப்.25ல் கூடுகிறது

Lok Sabha Elections 2019: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார். அதில் மதிமுக சார்பில் மக்களவை தேர்தலுக்காக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விருதுநகர் தொகுதியில் வைகோ மீண்டும் போட்டியிடுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக – காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீடு உறுதியானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதன்படி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மற்ற மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும், தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியிருக்கும் நிலையில், தற்பொழுது திமுக காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருப்பது தமிழகத்தில் காங்கிரஸின் மீதான மக்களின் பார்வை சாதகமாக இருப்பதை கருத்தில் கொண்டு திமுகவால் எடுக்கப்பட்ட முடிவு என்றே சொல்லலாம்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகளை எதிர்த்து போட்டியிட்டு வெல்ல திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குளறுபாடுகளும் மன கசப்புகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். அதை உணர்ந்திருக்கும் திமுக தொகுதி பங்கீட்டில் காங்கிரஸிற்கு போதும் என்ற அளவிற்கு அள்ளி வழங்கியிருக்கிறது.

காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக

Lok Sabha Elections 2019: காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகி உள்ள கூட்டணி ஒப்பந்தப்படி, மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம் பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மதுரையில் தேவர் சமூகத்தினர் போராட்டம்

Madurai: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் 7 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரின் வரலாற்றை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிப்பாளையத்தில் தேவர் சமுதாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அனைத்து கடைகளும் அடைக்க பட்டிருக்கும் நிலையில்அண்ணாநிலையம், பெரியார் நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபட சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக தகவல்

Lok Sabha Elections 2019: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அதில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் போட்டியிடும் எனவும் அதில் போட்டியிட்டு தற்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை தோற்கடிப்போம் எனவும் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த 10 தொகுதிகளில் நிச்சயம் காங்கிரஸ் கன்னியாகுமரியில் போட்டியிடும் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் தகவல்.

ஜெ.வின் ஆன்மா மன்னிக்காது கருணாஸ் பேட்டி

MLA Karunas:முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் கொள்கை தனித்துப் போட்டியிடுவதே. ஆனால் தற்போதைய அதிமுகவினர் அதனை மறந்து பாஜக பாமக உடன் கூட்டணி அமைத்திருப்பது, ஜெ.வின் ஆன்மா கூட அவர்களை மன்னிக்காது என விமர்சித்துள்ளார் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்.

கூட்டணியில் இருந்து வெளியேறினார் தமிமுன் அன்சாரி

Lok Sabha Election 2019 Latest News:  அதிமுகவின் தோழமை கட்சிகளாக இருந்துவந்தது மனிதநேய ஜனநாயக கட்சி ஆனால் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். இனி அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என தமிமுன் அன்சாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Election 2019 Tamil Nadu:  மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்த விவரம்

பாமக – 7
பாஜக 5

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.

இணைந்தது பாமக

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

கைகோர்த்த பாஜக

ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?

இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

திமுக கூட்டணிக்கு சவாலா ?

இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.

யாருக்கு எந்த தொகுதிகள் ?

அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?

மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.

Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

Lok Sabha Election 2019 Latest News & Updates:  அதிமுக தலையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது, இதனை திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர், கொள்ளைக்கு முரணான கூட்டணி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை “ இது எதிரிகளை வீழ்த்தும் கூட்டணியே தவிர, கொள்கைக்கான கூட்டணி அல்ல’ என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

Lok Sabha Election 2019 Latest News: எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

காங்கிரஸ்க்கு 10 தொகுதியா ?

Breaking News Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, தொகுதி பங்கீடு பொறுத்தவரை காங்கிரஸ்க்கு 8 தொகுதி வழங்க தயார் என திமுக தலைமை அறிவித்திருந்தது, ஆனால் காங்கிரஸ் இரட்டை இலக்கில் தொகுதிகளில் கேட்டது, நிறைவாக 10 தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ்கே தரப்படும் என தெரிகிறது, மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளது.

Lok Sabha Elections 2019 : பியூஷ் கோயலுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

Lok Sabha Election 2019 Alliance: இன்று காலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, பாமகவிற்கு 7 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஸ், ஆகியோர் சந்திப்பு நடைபெறுகிறது, பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.

Chennai News Today: CTS நிறுவன ஊழலில் அதிமுகவிற்கு தொடர்பு

Chennai News Today: சென்னையில் சி டி எஸ் நிறுவனத்திடம் கட்டிடம், மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற அதிமுக அரசு 26 கோடி லஞ்சம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுவிட்டன. அதிமுக அரசின் இந்த இமாலய ஊழல் 2012 முதல் 2016 ஆம் ஆண்டிற்குள் நடந்துள்ளது. எனவே தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து இந்த ஊழலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Lok Sabha Elections 2019 : உறுதியானது அதிமுக பாமக கூட்டணி

Lok Sabha Election AIADMK – PMK Alliance: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாமாகவும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாமகவிற்கு என துணை முதல்வர் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடக்க இருக்கும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Makkal Needhi Maiam: எங்களை பார்த்து காப்பி அடிக்கிறார்கள் – சீறும் கமல்

Makkal Needhi Maiam Latest News: மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஓன்றில் பேசிய கமல் 25 வருடமாக இவர்களுக்கு கிராம சபை கூட்டம் இருப்பது தெரியாமல் போனது ஏன். எங்கள் கட்சி நடத்தியதை பார்த்து காப்பி அடித்துள்ளனர், என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரை கமல் விமர்சித்துள்ளார்.

AIADMK News in Tamil- இலை கட்சியில் சலசலப்பு

மக்களவை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்கு தம்பிதுரை கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோருக்கும் அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை எனவும் கூட்டணி அமைந்தால் எங்கள் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே அரசிற்கு பெருமான்மை இல்லாத நிலையில் ஆதரவை திரும்ப பெறுவோம் என அவர்கள் கூறியிருபப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Makkal Needhi Maiam: நான் சட்டையை கிழிக்க மாட்டேன் கமல் கிண்டல் பேச்சு

Makkal Needhi Maiam Latest News: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் சட்டமன்றத்தில் எனது சட்டயை கிழிக்க மாட்டேன் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படியே கிழிந்தாலும் சட்டையை மாற்றிவிட்டு தான் வெளியே வருவேன் என்றார் கமல். இரண்டு ஆண்டுகள் முன்னர் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து விட்டதாக கிழிந்த சட்டையோடு ஸ்டாலின் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pulwama Attack: புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் இறக்குமதிக்கு சுங்க வரியை அதிகரித்தது இந்தியா

Pulwama Attack: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்- இ- முகமது என்கின்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீதான சுங்க வரியை இந்தியா அரசு 200% உயர்த்தியுள்ளது. இது உடனே அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Lok Sabha Elections 2019: நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது

Rajinikanth won’t contest 2019 Lok Sabha elections: இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு” என்றும் கூறியுள்ளார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை; எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னுடைய படம் மற்றும் மன்றத்தின் கொடியை வைத்து எந்த கட்சியும் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார்.

Jayalalitha Death News in Tamil: ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம் – தம்பி துரை அதிரடி

Jayalalitha Death News in Tamil: கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் தம்பி துரை, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு திமுக தான் காரணம். அவர்கள் தொடர்ந்த வழக்கினால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் இறந்து விட்டார். எனவே அதற்கு காரணமான திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்றும் கூறினார்.

Tamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற கனிமொழி

Tamil Nadu DMK News: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக கனிமொழி களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அங்கு தேர்தல் வேலைகளை கவனிக்கவும் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் நேற்று மாலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கியதும் கட்சி தலைமையிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு வந்த விமானத்திலேயே சென்னை திரும்பிய அவர் பிறகு டெல்லிக்கு விரைந்தார்.

அனைத்து கட்சி கூட்டம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை ஒரு அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.

திமுக சார்பில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு க ஸ்டாலின் கூறியதன் பெயரில் கனிமொழி மற்றும் டி ஆர் பாலு ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

இதையடுத்து நடைபெற்ற அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் “தீவிரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினருக்கு உதவியாக தோளோடு தோள் நிற்போம்; நாட்டின் ஒற்றுமையையும் நேர்மையையும் காப்போம்” என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உறுதிமொழி எடுத்தனர்.

Lok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா

Lok Sabha Election Alliance in Tamil Nadu: தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில கட்சிகளோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை  துவங்கியுள்ளது பாஜக. தமிழக அரசியலை பெருத்தவரையில் பாஜக ஒற்றரை இலக்கு வாக்கு வங்கியையே பெற்றுள்ளது, தமிழகத்தில் நடந்த கடைசி தேர்தலான ஆர்.கே நகர் தேர்தலில் நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளை பெற்றது பாஜக, தமிழகத்தில் தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவோடு கூட்டணி தொடர்பாக சில தினங்களாகாவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக-பாஜகவோடு மேலும் சில கட்சிகளும் சேரும் என்றே பேசப்பட்டது. அண்மையில் பாமக இளைகஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார், மேலும் தேமுதிக சார்பில் சில கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று அறிவிக்கப்பட்டது, அதிமுக தரப்பில் பேசிய வைத்தியலிங்கம் கூறியதாவது ‘’ பாமக, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம்” என்றார். இந்த தருணத்தில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அமித்ஷா தமிழகம் வந்த அதே நாளில் தான் மத்திய அமைச்சர் பி்யுஷ் கோயலும் சென்னை விரைந்தார். தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர், இது அவர்கள் கூட்டணியை தொடர்பான செய்தி உறுதியானது, ஆகவே அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதில் அதிமுகவையும் இதர மாநில கட்சிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக இறக்கியுள்ளதாக தெரிகிறது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தால் தொகுதி பங்கீடு பற்றிய கேள்வி ஏழும், அதற்கு பதில் தரும் விதமாக சமூக வலைதளத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகவலின் அடிப்படையில்

அதிமுக  24 தொகுதிகளும்

பாஜக     8    தொகுதிகளும்

பாமக   4     தொகுதிகளும்

தேமுதிக  4  தொகுதிகளும்

போட்டியிடலாம் என்றே கூறப்படுகிறது, இருப்பினும் இவைகளில் எந்த கட்சியும் கூட்டணி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப் படும் என்றே றப்படுகிறது. மேலும் தமிழக மக்களிடையே இந்த கூட்டணி வரவேற்பை பெருமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகளே சரியான பதிலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Lok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ம.தி.மு.க. நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட வேண்டும். மேலும் பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தேர்தலில் 125 இடங்களை மட்டுமே பாஜகவால் வெல்லமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்றார்.

Tamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இம்முறை தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் பிரம்மாண்டமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழக மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சியை கொடுப்போம் என உறுதியளித்தார். திமுக, காங்கிரஸ் தவிர இதர கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும், எந்தெந்த கட்சி என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்,

AIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் ராமசாமி, அதிமுக வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பினார். அப்போது அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தயார் என்றால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயார் என கூறினார். மேலும் 1967 முதல் காங்கிரஸ் அதிமுக,திமுக மீது தான் சவாரி செய்து வருகிறது என விமர்சித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் பார்வையாளர்கள் ”இது போன்ற கருத்துகள் எழுவது பெரிதல்ல, எந்த கட்சியும் தனித்து நிற்கும் சூழல் இன்று இல்லை”.

Road Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இன்னும் 2 வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து பாஜக தலைவரும் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் கட்சியின் செயல்பாடுகளை பலப்படுத்தும் வகையில் நாளை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பா.ஜ.க வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றுகிறார்.

Tamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழகத்தில் அந்தயோத்யா அட்டைதாரர்கள் 18 லட்சம் பேர் மட்டுமே அப்படி இருக்கையில் 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளது என்று தமிழக அரசு கூறுவது எப்படி சரியாகும்? தேர்தலை கருத்தில் கொண்டு இந்த எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரித்துள்ளது. எனவே இத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

DMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

பா.ஜ.க மற்றும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதை அடுத்து நாளை மறுநாள் காலை 8.30 மணி அளவில் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னைக்கு வந்த பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amit Shah In Tamil Nadu: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா ஈரோட்டிற்கு வருகிறார். ஈரோட்டில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் நெசவாளர்களையும் சந்திக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

நீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங்

இன்று மக்களவையில் சமாஜ்வாதியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் உரை நிகழ்த்தினார், அப்போது மக்களவையில் உள்ள அனைவருமே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார், அதன்பின்னர் பிரதமர் மோடியை பார்த்து மீண்டும் நீங்களே பிரதமதராக வேண்டும், என வாழ்த்து தெரிவித்தார். இது அருகில் அமர்ந்திருந்த சோனியா காந்திக்கு பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வரும் தருணத்தில் முலாயம் சிங் இவ்வாறு பேசியிருப்பது தேசிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டெபாசிட் இழந்த தி.மு.க என்று நாங்கள் அழைக்கலாமா? – தமிழிசை சௌந்தர்ராஜன்

பா.ஜ.க. நோட்டா உடன் தான் போட்டி போடும் என்று கி வீரமணி கூறியதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், “தேர்தலையே சந்திக்காத வீரமணி அவ்வாறு சொல்வதற்கு தகுதி அற்றவர். ஆர் கே நகர் தொகுதியில் தி.மு.க டெபாசிட் இழந்தது. அப்படி என்றால் தி.மு.க டெபாசிட் இழந்த கட்சி என்று நாங்கள் அழைக்கலாமா?” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

2019 Lok Sabha Elections Tamilnadu: வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது, இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டணி அறிவிப்பு வெளியாகும் இந்த சமயத்திலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார், அண்மையில் மக்களவையில் பேசிய தம்பிதுரை ஜி.எஸ்.டி வரி தொடர்பாக மாநில அரசிற்கு வர வேண்டிய தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், அதனை பெற பிச்சை எடுப்பது போல் கேட்டு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாஜகவோடு நட்பும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்ற அதிரடி பதிலையும் கொடுத்துள்ளார், இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் தம்பிதுரைக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தெரிகிறது. இதனை அதிமுக தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி, ஒருவேளை கூட்டணி அறிவிப்பு வெளியானதும் தனது அதிருப்தியை தெரிவிப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. இதனை தவிர்க்க அதிமுக தலைமை அவரை சமாதான செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது தம்பிதுரை கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர், வருகின்ற தேர்தலில் அவர் அதே தொகுதியில் போட்டியிடலாம். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கிட்டதட்ட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் என்பதால் அதே தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?

2019 Lok Sabha Elections Tamilnadu: பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று ஓரிரு மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் தேசிய செயலர் முரளிதர ராவ் “தமிழகத்தில் கடந்த தேர்தலை எப்படி கூட்டணியோடு அணுகினோமோ அதேபோல் பலம் பொருந்திய கூட்டணியை அமைத்து இந்த தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

அதோடு நிற்காமல் தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகி விட்டதாக தெரிவித்தார், இதனால் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும், மேலும் பாஜக அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனவும் கூறினார்.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

ஆனால் அவர் பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெரும் என்பது குறித்து பேசவில்லை. பாஜக தலைவர்கள் சிலர் அதிமுகவோடு தான் கூட்டணி அமையும் என பேசிவருகிறார்கள். மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையை பெருத்தவரையில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி குறித்து இன்னும் முடிவெக்க வில்லை. பாமக இளைஞர் அணி செயலர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அண்மையில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

மேலும் தேமுதிகவும் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பின்னர் அதில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் திமுகவின் மெகா கூட்டணிக்கு நிகரான ஒரு பலம் வாய்ந்த கூட்டணியாக பாஜக கூட்டணி அமையும்.

ஒருவேளை நான்கு கட்சிகளும் ஒர் அணியில் திரளும் பட்சத்தில் தொகுதி பங்கீடு சவாலாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடதக்கது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

பாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?

அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை மாநிலமே எதிர்பார்த்து வரும் நிலையில் கட்சி தலைமை அமைதி காத்து வருகிறது. இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், “பாஜக, பாமக மற்றும் தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் யுக்திகளை கையாளுகிறதா அதிமுக ?

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளர். தமிழகத்தை பொருத்தவரை அனைத்து வர்கத்தை சார்ந்தவரும் உள்ளனர். இன்றைய சமூகத்தில் பல்வேறு வளர்ச்சிகளை நாம் அணுதினமும் பார்க்கிறோம், ஆனால் அதனை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களால் ருசிக்கமுடியாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நிதிநிலைமை. இன்றைய கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு நிகராக வளர்ந்து வருகிறது. மருத்துவமும் செலவும் இமாலய உயரத்தை தொட்டுவிடுகிறது. இதன் விளைவாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் ஏழை தொழிலாளர்களின் துயரை மொத்தமாக நீக்கிவிடாது என்றாலும் அவர்களுக்கு அறுதலாக இருக்கும் என்பதே உண்மை. இந்த திட்டத்தின் வாயிலாக வருடத்திற்கு 24,000 ரூபாய் என்பது ஏழை தொழிலாளர்களுக்கு மிகவும் தேவையான ஓன்றாக இருக்கும். ஒரு கிராமப்புற குழந்தையின் கல்வி செலவுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் 60 லட்சம் தொழிலாளர்கள் நன்மை அடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது நல்ல திட்டம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை, இருப்பினும் அதனை நடைமுறைபடுத்த இது சரியான காலம்தானா என்ற கேள்விகளை எழுப்புகிறது. அண்மையில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அப்போது தேர்தலை கருத்தில் கொண்டு தான் அதிமுக சில திட்டங்களை அறிவித்துள்ளது என்ற அதே குற்றச்சாட்டு இதற்க்கும் பொருந்தும். ஏழை தொழிலாளர்களுக்கு ஊக்க தொகை கொடுப்பது பெருமை அல்ல, ஏழை தொழிலாளர்களை உயர்த்த ஒரு திட்டம் தீட்டாதது ஏன் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. இந்த 2000 ரூபாயும் 60 லட்சம் தொழிலாளர்களை சென்று அடையுமா? இந்த திட்டம் எப்போது அமல் படுத்தப்படும், என்ற பதிலுக்காக காத்திருக்கிறார்கள் ஏழை தொழிலாளர்கள். பொதுவாகவே தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் வரும் சூழலில் இலவச திட்டங்கள், கடன் ரத்து போன்று திட்டங்களை அறிவித்து மக்களை கவர்வது தமிழக அரசியலில் வழக்கமான ஒன்று தான்.

தொகுதி பங்கீட்டில் இழுபறியா ?

மக்களவை தேர்தல் களம் தமிழகத்தில் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது, அதனை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், இந்த மாதம் ராகுல் காந்தியும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார், அது ஒருபக்கம் இருந்தாலும் திரைக்கு பின்னர் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியே கூட்டணியோடு தான் தேர்தலில் ஈடுபட உள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கூட்டணியோடு தான் தேர்தலை அணுக இருக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எளிதில் நிறைவு பெறாததற்கு, தொகுதி பங்கீடும் ஒரு இடையூறாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, முந்தைய தேர்தல் சமயத்தில் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லாததனால் கூட்டணியே முறிவடைந்துள்ளது. எடுத்துகாட்டாக 2016 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவும் தமிழ்மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்தை நல்ல முடிவு எட்டப்பட்டாலும் தொகுதிகள் குறைவு என்பதற்காக வெளியேறிய தமிழ்மாநில காங்கிரஸ் மக்கள் நலக் கூட்டணியோடு இணைத்து கொண்டது. அதே நிலைதான் தமிழகத்திலும் நிலவுவது போல் தெரிகிறது.

திமுக பொருத்தவரை இம்முறை மெகா கூட்டணி அமையும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது.. அதிமுகவை பொருத்தவரை தேசிய கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறினாலும் பாஜகவுடனான கூட்டணிக்கே அதிக வாய்ப்பு என்பதை அரசியல் நிகழ்வுகள் தெரியப்படுத்துகிறது

இன்னும் சில

தமிழக கட்சிகளில் இன்னும் சில கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ் மேலும் சில உள்ளூர் கட்சிகளும் முடிவை அறிவிக்காமல் இருக்கின்றன.

எங்களுக்கு இந்த தொகுதி

பொதுவாகவே தொகுதி பங்கீட்டில ”’எத்தனை தொகுதி” என்பதை விட ”எந்த தொகுதி” என்பதே சலசலப்பை ஏற்படுத்தும், சில கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வரவேற்பு இருக்கும், ஆகையால் அவர்கள் அங்கே போட்டியிட நிர்பந்திப்பது வழக்கம், அதற்கு கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதுபோல் பல்வேறு பிரச்சனைகள் குறுகிய காலத்தில் தலைதூக்கும், இதனை சமாளித்து தேர்தலை சந்திப்பது எளிதல்ல.

தற்போதைய நிலையில் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் தான் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

யார் யாருடன் கூட்டணி ! இன்னும் சில தினங்களில் !

பிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்

நேற்று தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே டிவிட்டரில் GO BACK MODI என்ற வாசகம் பிரபலமாகி வந்தது, மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியே நேரடியாக பிரச்சார களத்தில் குதித்துள்ளார். அந்த வகையில் நேற்று திருப்பூரில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார், மேலும் திருப்பூரில் நடைபெற்ற தமிழக அரசின் விழாவிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு திட்டங்களை காணொளி மூலம் அவர் திறந்து வைத்தார், பாஜக பொதுகூட்டதில் பேசிய மோடி காமராஜர் ஆசை பட்ட ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது என்று கூறிப்பிட்டார்

தமிழக அரசியலில் பிரதமர் மோடியின் வருகை எதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு வரலாறே பதில் சொல்லும் பிரதமர் மோடி பல முறை தமிழகம் வந்திருந்தாலும் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் இல்லை என்பதே நிதர்சனம். மக்களவை தேர்தலை நோக்கி நாம் பயணிக்கும் இந்த தருணத்தில் மோடியின் வருகை முக்கியதுவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது, கூட்டணி குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபட்டது, ஆனால் அது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை தமிழக மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் பாஜக அரசு முயற்சித்து வருவதாகவும், தொழிலாளர்கள் நலம் சார்ந்த திட்டங்களை மட்டுமே எங்கள் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது, மேலும் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம் பாதுகாப்பு தளவாடங்களில் நம் நாடு தன்னிறைவு அடைய இரண்டு பாதுகாப்பு பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதில் ஒன்று தமிழகத்தில் தான் அமையவுள்ளது என்றார் மோடி. சகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்கள் பலப்படுத்தப்படும் எனவும், ஊழல் மற்றும் தவறான செயல்ளை எங்கள் அரசு தடுத்து நிறுத்தும் என்றார் பிரதமர் மோடி. குறிப்பாக சாலை மேம்பாடுகளில் அரசு கவனம் செலுத்தும் எனவும் உறுதியளித்தார்

காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளது காங்கிரஸ். நாட்டின் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டாமல் தற்போதிய ராணுவத்தை சிறுமைபடுத்தும் வகையிலும் பேசிவருகிறது காங்கிரஸ் கட்சி. பிரச்சாரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினரின் கேலி பேச்சுகளை கேட்க மக்கள் தயாராக இல்லை என்று காங்கிரஸை விமர்சித்தார், மேலும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு இப்போது பேக்கேஜ் முறையில் ஒரு குடும்பம் ஜாமின் வாங்கி வருகிறது என மறைமுகமாக பா.சிதம்பரத்தை விமர்சித்தார். பிரதமரின் தமிழகம் வருகை பாஜகவின் வாக்கு வங்கியில் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தேர்தல் முடிவுகள் தான் தெரியப்படுத்தும்.

அடுத்தக்கட்டமாக பிப்ரவரி 19 அன்று பிரதமர் பிரச்சாரத்திற்க்காக கன்னியாக்குமரி செல்கிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.

அரசியல் திருப்பத்தை எற்படுத்துமா திருப்பூர் வருகை ?

மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு திருப்பூர் பிரச்சாரம் பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று திருப்பூர் வருகிறார். அதோடு தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் மோடி..

மதியம் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரதமர் கோவை வந்தடைகிறார்.. பின் 3.05 மணிக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்கிறார்.

அரசு விழாவில் டிஎம்ஸ்-வண்ணாரபேட்டை வழிதடத்தில் மெட்ரோ சேவை, விமான நிலைய புனரமைப்பு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சபாநாயகர் தனபால் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

அதன் பின்னர் 3.25 மணிக்கு பாஜக பொது கூட்டம் நடைபெறும் பெருமாநல்லூர் வருகிறார். அங்கு மாபெரும் பொதுகூட்ட மேடை அமைக்கபட்டுள்ளது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட கட்சி பிரமுகா்கள் கலந்துகொள்ள உள்ளனா். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். பின் 5.10 மணிக்கு புறப்பட்டு பிரதமர் மோடி கோவை வழியாக கர்நாடகா செல்வார் என தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருவதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் தமிழக பாஜக தலைவர் கூறுவகையில் மோடி தமிழகம் வருவதால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் மோடி சுற்றுபயணம் மெற்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரதமர் தமிழகம் வருவதையொட்டி டிவிட்டரில் ‘’GO BACK MODI” மீண்டும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடதக்கது.

தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் பற்றிய அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

தொழில் துறை:

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு.
  • முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி ஒதுக்கீடு.
  • குறு, சிறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு.
  • நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு.

மின்சார துறை:

  • கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூபாய் 5259 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலம்:

  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ.572.19 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகளும் 3000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு.

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled – தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

Tamil Nadu Budget 2019 – Education: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கல்வி துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

  • மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
  • பள்ளிக்கல்வி துறைக்கு ரூபாய் 28,757.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உயர் கல்வி துறைக்கு ரூபாய் 4584.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்.
  • புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2011-12 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 63,178 ஆக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.
  • Tamil Nadu Budget 2019 – Education: தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

தமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • விவசாயத்திற்கு ரூபாய் 10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 621.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு லட்சம் ஹெக்டர் பரப்பில் தண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூபாய் 1361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.
  • கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நெல் கொள்முதல் ஊக்கத் திட்டத்திற்கு ரூபாய் 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800-க்கும், சன்ன ரக நெல் ரூபாய் 1840-க்கும் வழங்கப்படும்.
  • விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 லட்சம் ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ரூபாய் 198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 100 கோடி செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.
  • வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூபாய் 172 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
  • கஜா புயல் நிவாரணத்திற்காக 2361.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers – தமிழக பட்ஜெட் 2019: வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை

Tamil Nadu Budget 2019-Transportation2019: 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் போக்குவரத்து துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • நெடுஞ்சாலை துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 1142 கோடி செலவில் 1986 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 45.01 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் இந்த
    மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
  • இனி வரும் நாட்களில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.90 கிலோமீட்டர் நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – கோயம்பேடு வரை 52.01 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும்.
  • மீனம்பாக்கம்-வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
  • 256 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூபாய் 726.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை,கோவை மற்றும் மதுரையில் 500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
  • ஜெர்மன் கடனுதவியுடன் 12,000 BS – 4 என்ஜின் பேருந்துகளும் 2000 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும்.

Tamil Nadu Budget 2019: Transportation – தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை